முதல்வர் எம்ஜிஆர் மறைந்து, 35 ஆண்டுகளாகியும் தமிழர்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தபோதிலும், எந்தப் புத்தகத்திலும் இல்லாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்ஜிஆரோடு நடித்த நடிகைகள், திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள..
பூங்கோதையின் மீது காதல் நினைவாகவே உள்ள தன்னுடைய மகன் பொன்முடியை வடநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் அவனது தந்தை மான நாய்கன். பூங்கோதையும் அவனுடைய பிரிவு தாளமுடியாமல் அவனைக் காணப்போகிறாள். வடநாட்டில் ஆரியர்கள் யாகத்திற்குப் பொருளுதவி கேட்க, அந்த யாகத்தை இழிவாகப் பேசுகிறார்கள் பொன்முடியும் மற்ற தமிழர்களும்..
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்.
ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகை..
எஸ்.எம்.எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்தரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன. பின்னணிகள் முற்றிலும் துருவங்களால் பிரிக்கப்பட்டவை! இருப்பினும் அவற்றில் பக்திப் பின்னணியுடன் ஓர் ஒருமையைப் புகுத்தி, அதையும் உயிரோடவிட..
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன..
2021ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அப்துல்ரஸாக் குர்னாவின் மிகச் சிறந்த நாவலான 'By The Sea'யின் தமிழாக்கம் 'ஒரு கடல் இருநிலம்.'
ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து பிரிட்டனுக்கு அகதியாக வந்து சேரும் சலேக் ஓமர், தனது நாட்டைச் சேர்ந்த லத்தீப் மஹ்மூதை அங்கு சந்திக்க நேர்கிறது. சொந்த நாட்டில் ..
'காதல் என்பது ஒருவரையொருவர் ஆக்கிரமிப்புச் செய்து, அதில் இன்பங் கண்டு, அன்பின் ஆழத்தினை பரிசோதித்துக் கொள்ளும் உறவுமுறை' என அனைவரும் தம அகத்தின் ஏதோ ஒரு மூலையில் நிறுவி வைத்திருக்கும் அடிப்படைச் சிந்தனையை உடைத்துப் போடுகிறது இந்த நாவல். ஜெயகாந்தனின் பார்வையில் இன்டெலெக்சுவல் காதலும் அழகு, அதனால் ஏற்..
"அப்பா, ஹரி. உன் விஷயத்தை நீ சுலபமாகத் தீர்த்துகொண்டு விட்டாய். ஆனால் பிரச்சினை அவ்வளவு எளிதல்ல. உன் புதுச் செருப்பை எடுத்துக்கொண்டு, பழைய செருப்பை உனக்காக வைத்துவிட்டுப் போனதாக நீ முடிவு கட்டிவிட்டாய். அப்படித்தான் நடந்தது என்பது என்ன நிச்சயம்? செருப்பே கொண்டு வராதவன் உன் செருப்பை மாட்டிக் கொண்டு ப..